Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் அவலம்; மனைவியின் சடலத்தை பைக்கில் எடுத்துச்சென்ற கணவர்

Webdunia
திங்கள், 5 ஜூன் 2017 (18:09 IST)
பீகார் மாநிலத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் தனது இறந்த மனைவியின் உடலை பைக்கில் எடுத்துச் சென்ற சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் உள்ள ரானீபாரி கிராமத்தை சேர்ந்த ஷங்கர் ஷா(60) என்பவரது மனைவி சுஷீலா தேவி(50) உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சுஷீலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
இதையடுத்து ஷங்கர் தனது மனைவியின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனையில் அமரர் ஊர்த்தி கேட்டுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்த்தி தர மறுத்துவிட்டனர். தனியார் அமரர் ஊர்த்திக்கு ரூ.2,500 கேட்டதாக கூறப்படுகிறது.
 
அவ்வளவு பணம் இல்லாததால் ஷங்கர் ஷா மகனின் உதவியோடு தனது மனைவியின் உடலை பைக்கில் எடுத்துச் சென்றுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை அளிக்குமாறு பாட்னா மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 
 
இந்தியாவில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிரது. அதுவும் குறிப்பாக வட இந்தியா பகுதியில்தான் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments