Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போட்டோ எடுக்க போன மனைவியை சுட்டு கொன்ற கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

Advertiesment
கோரக்பூர்

Mahendran

, வியாழன், 4 செப்டம்பர் 2025 (10:17 IST)
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில், சொத்து பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் கணவன் தனது மனைவியை சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
விஸ்வகர்மா சவுகான் மற்றும் அவரது மனைவி மம்தா என்கிற முக்தி சவுகான் கடந்த பத்து ஆண்டுகளாக சொத்து பிரச்சினையில் சண்டையிட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக, ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
 
இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் மம்தா தனது புகைப்படங்களை எடுப்பதற்காக கோரக்பூரில் உள்ள ஒரு போட்டோ ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த விஸ்வகர்மாவுடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த விஸ்வகர்மா, தான் வைத்திருந்த துப்பாக்கியால் மம்தாவின் நெஞ்சில் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
 
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மம்தாவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தப்பியோடிய விஸ்வகர்மாவை போலீஸார் தீவிர தேடுதலுக்கு பிறகு கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
மம்தா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததுடன், அவருக்கு 13 வயது மகள் ஒருவரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

40% ஜிஎஸ்டி வரி : ஐபிஎல் டிக்கெட் விலை உயரும் என தகவல்.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!