Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிசோரம் அமைச்சரின் கால் தூசுக்கு சமம் ஆவார்களா நம் அமைச்சர்கள்?

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (22:54 IST)
தங்களுடைய பதவியை காப்பாற்றிக்கொள்ள வாரம் ஒரு முறை டெல்லிக்கு சென்று சமாதானம் பேசும் தமிழக அரசியல்வாதிகளும் அமைச்சர்களும், மக்களுக்கு ஒரு குறை என்றால் கடிதம் எழுதுவதோடு நிறுத்தி கொள்கின்றனர்.



 
 
நீட் தேர்வில் ஆரம்பத்தில் இருந்தே சொதப்பிய தமிழக அரசு கடைசியில் அவசர சட்டத்திலும் கோட்டை விட்டது. இதன் பலன் நீட் தேர்வு வெற்றி பெற்று இன்று நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
 
மிசோரம் மாநிலத்தை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் புத்த தன் சக்மா என்பவர் தனது மாநிலத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் கவுன்சிலிங் நடந்ததால் மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்த 4 மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்
 
4 மாணவர்களுக்காகவே பதவியை துச்சமென மதித்த அமைச்சர் ஒருவரின் மத்தியில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதித்த நிலையிலும் ராஜினாமா குறித்த நம் அரசியல்வாதிகள் வாயை திறக்கவே இல்லை. மிசோரம் அமைச்சரின் கால்தூசுக்கு நம் அமைச்சர்கள் ஆகமாட்டார்கள் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் டுவிட்டரில் படுகோபமாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments