Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி உடலில் விஷ ஊசி; சர்ச்சையை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி

Webdunia
சனி, 21 ஜூலை 2018 (19:13 IST)
ராகுல் காந்தி மோடியை கட்டியணைத்தற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சையான கருத்து ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆக்ரோஷமாக பேசி பாராளுமன்றத்தை அதிர வைத்தார்.
 
பின்னர் தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று மோடியை கட்டி அணைத்தார். இதை எதிர்பார்க்காத மோடி திரும்பிச்சென்ற ராகுலையின் கையைப் பிடித்து தன் அருகே இழுத்து அவர் பேசியதற்கு வாழ்த்து சொல்லி கைகுலுக்கினார். 
 
இந்த சம்பவம் நேற்று முதல் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
 
ராகுல் காந்தி கட்டியணைக்க, பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது ரஷ்யர்களும், கொரியர்களும் விஷ ஊசி செலுத்தி தங்களது எதிரிகளை வீழ்த்த முயல்வார்கள். மோடி உடனடியாக மருத்துவமனை சென்று தனது உடலில் ஏதேனும் விஷ ஊசி செலுத்தப்பட்டுள்ளதா என்று பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
 
இவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments