Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முத்தலாக் முறையில் விவாகரத்து: பெண்ணின் தாயார் அதிர்ச்சியில் மரணம்!

dead
, வியாழன், 29 டிசம்பர் 2022 (15:36 IST)
முத்தலாக் முறையில் மகளை விவாகரத்து செய்ததால் அந்த அதிர்ச்சியில் அவரது தாய் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ என்ற பகுதியில் சமீபத்தில் ஒரு பெண் தனது மகளுக்கு ஆசை ஆசையாய் திருமணம் செய்து வைத்தார். இந்த நிலையில் மருமகன் வரதட்சணையாக பைக் வாங்கி தர வேண்டும் என்று கேட்டதாகவும் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த பைக்கை மணமகளின் தாயார் வாங்கி கொடுக்க முடியவில்லை என்றும் தெரிகிறது.
 
இதனை அடுத்து பைக் வாங்கித் தராத ஆத்திரத்தில் முத்தலாக் முறையில் மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக தெரிகிறது. மகளுக்கு ஆசை ஆசையாய் திருமணம் செய்து வைத்த நிலையில் திடீரென தனது மருமகன் தனது மகளை விவாகரத்து செய்துவிட்டதாக தெரிய வந்ததும் அந்த அதிர்ச்சியில் அந்த பெண் உயிரிழந்துள்ளார் 
 
இதனை அடுத்து மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணி தலைமறைவு! டெல்லியில் பரபரப்பு!