Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 23 May 2025
webdunia

ரூ.75 ஆயிரம் கோடி புதிய முதலீடு: முகேஷ் அம்பானி எடுத்த அதிரடி முடிவு..!

Advertiesment
mukesh ambani
, ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (11:54 IST)
உத்திரபிரதேசம் மாநிலத்தில் ரூபாய் 75 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக முகேஷ் அம்பானி அதிரடியாக அறிவித்துள்ளார். 
 
உத்திரபிரதேசம் மாநிலத்தில் சில்லறை வணிகம் உள்ளிட்ட துறைகளில் ரிலையன்ஸ் பெரும் முதலீடு மேற்கொள்ள இருப்பதாகவும் உத்தரபிரதேசத்தில் உள்ள சிறிய கடைகளை மேம்படுத்தி அவர்களது வருவாயை பெருக்கும் வகையில் ரிலையன்ஸ் ரீடைல் விரிவுபடுத்தப்படும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே உத்தரபிரதேச மாநிலத்தில் ஆதித்யபிர்லா குழுமம் மற்றும் டாடா குழுமம் ஆகியவை மிகப்பெரிய முதலீடு செய்துள்ள நிலையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் காத்திருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் நிறுவனமும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 75000 கோடி முதலீடு செய்ய இருப்பதால் அம்மாநிலத்தில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; இளங்கோவன், தென்னரசு சொத்து மதிப்பு எவ்வளவு?