Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.விற்கு பின் நயன்தாராதான் ‘தலைவி’ - பாராட்டும் பிரபல பத்திரிக்கை

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (14:01 IST)
நடிகை நயன்தாராவை தமிழ் ரசிகர்கள் ‘தலைவி’ என அழைக்கத் தொடங்கியுள்ளதாக பிரபல மலையாளப் பத்திரிக்கை மலையாள மனோரமா செய்தி வெளியிட்டுள்ளது.






 

 
 
நடிகை நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியான அறம் படம் வெற்றி பெற்றதோடு, சிறந்த விமர்சனங்களையும் பெற்றுள்ளது. சமுதாய பிரச்சனைகளை கதைக்களமாக கொண்ட இப்படத்தில், மக்களுக்கு நன்மை செய்யும் கலெக்டர் வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். 
 

 
இந்நிலையில், மலையாளப் பத்திரிக்கை வெளியிட்டை செய்தியில் ‘ அறம் படத்திற்கு பின் தமிழ் சினிமா ரசிகர்கள் நயன்தாராவை ‘தலைவி’ என அழைக்கத் தொடங்கியுள்ளனர். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் நயன்தாராவிற்குதான் அந்த பட்டம் கிடைத்துள்ளது. சென்னையில் நடந்த அறம் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நயன் வந்த போது அவரை   ‘எங்கள் தலைவி நயன்தாரா’ என கூச்சலிட்டனர்.
 


 
சமீபகாலமாக நயன்தாரா சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால்தான், ஹீரோக்களை மட்டும் கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்கள் நயனை ‘தலைவி’ என அழைக்கத் தொடங்கியுள்ளனர். தமிழக அரசியலில் சினிமாத்துறையினரே வெற்றிக்கொடி நாட்டி, முதலமைச்சர் பதவியை அலங்கரித்து வருகின்றனர்” என செய்தி வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களிலும் நயன்தாரா ரசிகர்கள் அவரை தலைவியாக சித்தரித்து மீம்ஸ்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments