Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய 200 ரூபாய் நோட்டுகள்: இன்னும் 10 நாட்களில் புழக்கத்திற்கு வருகிறது!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (14:12 IST)
கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்க கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்த மத்திய அரசு புதிய 500 ரூபாய் மற்றும் புதிதாக 2000 ரூபாய் நோட்டையும் அறிமுகம் செய்தது.


 
 
இதனையடுத்து பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர். இந்நிலையில் தற்போது தான் ஓரளவுக்கு நிலமை சரியாகி பணப்புழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதிய 50 ரூபாய் நோட்டையும் புதிதாக 200 ரூபாய் நோட்டையும் அச்சடித்து வந்தது மத்திய அரசு.
 
புதிதாக அச்சிட்டுள்ள 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி இன்னும் 10 நாட்களில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. எக்கனாமிக்ஸ் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த புதிய 200 ரூபாய் நோட்டுகளை ஆகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்திலோ வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
50 கோடி ரூபாய் மதிப்பில் அச்சிடப்பட்டுள்ள இந்த புதிய 200 ரூபாய் நோட்டுகள் கருப்பு சந்தையில் சிக்காதவாறு ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளதாகவும், முன்னர் 2000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டபோது ஏற்பட்ட தவறுகள் மற்றும் சிக்கல்கள் இந்த முறை களையப்படும் எனவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments