Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம்-ல் முழுமையாக அச்சடிக்கப்படாத புதிய 500 ரூபாய் நோட்டுகள்

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2016 (18:06 IST)
மும்பை ஏடிஎம்-ல் முழுமையாக அச்சடிக்கப்படாத புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்ததாக புகார் எழுந்துள்ளது.


 

 
பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பின் 10 நாட்கள் கழித்துதான் புதிய 500 ரூபாய் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்தியா முழுவதும் இன்னும் வெளிவரவில்லை. வடமாநிலங்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே 500 ரூபாய் நோட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.
 
புதிய 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லரை தட்டுபாடு காரணமாக 100 ரூபாய் நோட்டுகளும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், மும்பையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் ஒன்றில் முழுமையாக அச்சடிக்கப்படாத புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 
 
அந்த ரூபாய் நோட்டுகளில் உள்ள மை பாதி அழிந்தநிலையில் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது சமூகவலைதங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அது கள்ள நோட்டாக இருக்கலாம் என்ற செய்தியும் பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments