Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிபா வைரசால் மேலும் இருவர் பலி - பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Advertiesment
கேரளா
, வியாழன், 31 மே 2018 (14:55 IST)
கேரளாவில் நிபா வைரசால் இன்று 2 பேர் பலியானதையடுத்து, இதன்மூலம் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. 
 
இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின் உடல்களில் உள்ள அனைத்து செய்ல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது. இந்த நிபா வைரஸ் தாக்கி கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர். 
கேரளா
இந்நிலையில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோழிக்கோட்டை சேர்ந்த மதுச்சூதனன்(55), முக்கம் பகுதியச்சேர்ந்த அகில்(28) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் நிபா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. பலர் நிபா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை : பாஜக படு தோல்வி