Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயில் சப்ளை கட்: ஏர் இந்தியாவுக்கு பாரத் & ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் வார்னிங்!!

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (10:11 IST)
நிலுவை தொகை செலுத்தவில்லை என்றால் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்படும் என பாரத் & ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஏர் இந்தியாவை எச்சரித்துள்ளது. 
 
ஏர் இந்தியா நிறுவனம் நிதி நெருக்கடியில் செயல்பட்டு வருகிறது. இதனால், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு எரிபொருளுக்கான பல ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை தொகையை செலுத்தாமல் காலம் கடத்தி வந்துள்ளது. 
 
இதனால், அந்நிறுவனங்கள் நிலுவைத் தொகையை செலுத்த இனியும்  தவறினால் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 6 முக்கிய விமான நிலையங்களில் வரும் 18 ஆம் தேதி முதல் எரிபொருள் வினியோகத்தை நிறுத்தப்போவதாக எச்சரித்துள்ளது. 
 
இதற்கு முன்னர் ரூ.5000 கோடி நிலுவை தொகையை காரணம் காட்டி கொச்சி, மொஹாலி, புனே, ராஞ்சி, பாட்னா, விசாகப்பட்டினம் ஆகிய விமான நிலையங்களில் எரிபொருள் வினியோகத்தை எண்னெய் நிறுவனங்கள் நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எண்ணெய் நிறுவனங்களின் இந்த அறிவிப்பால் ஏர் இந்தியா மேலும் நெருக்கடியை சந்திக்க கூடும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments