Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசமான சாலைகளுக்கு சுங்க கட்டணம் கிடையாது! – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

Prasanth Karthick
வியாழன், 27 ஜூன் 2024 (08:13 IST)
இந்தியாவில் மோசமாக பராமரிக்கப்படும் சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.



இந்தியா முழுவதும் மத்திய நெடுஞ்சாலைத்துறை பல்வேறு வழித்தடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்துள்ள நிலையில், அந்த சாலைகளை பயன்படுத்துவதற்காக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சில பராமரிப்பற்ற சாலை தடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதும், ஒரே வழித்தடத்தில் அடுத்தடுத்து பல சுங்கச்சாவடிகளை அமைத்து வசூலிப்பதும் வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் டெல்லியில் நடந்த செயற்கை கோள் உதவியுடன் வாகனங்களை கண்காணித்து கட்டணம் வசூலிக்கும் திட்டம் குறித்த கூட்டத்தில் பேசிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சுங்க கட்டணம் வசூலிப்பது குறித்த புதிய நெறிமுறைகளை குறித்து பேசியுள்ளார்.

ALSO READ: இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யும்: 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அதில் அவர் “சிறப்பான சாலைகள் உள்ள வழித்தடங்களில் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும். பராமரிப்பில்லாத, மோசமாக உள்ள சாலைகளில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது. குண்டும், குழியுமாக சாலையை வைத்துக்கொண்டு அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க நினைத்தால் மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments