Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணக்கார அராபிய ஷேக்குகளுக்கு பலியாகும் இந்திய சிறுமிகள்

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (06:26 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 60 வயதுக்கும் மேலான ஒரு அராபிய ஷேக் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு ஓமன் நாட்டுக்கு செல்ல முயற்சிக்கும் வேளையில் போலீசாரிடம் பிடிபட்டதாக ஒரு செய்தி வெளியானது. தற்போது இதே போல் மேலும் எட்டு அராபிய ஷேக்குகள் சிறுமிகளை திருமணம் செய்ய முயன்றதாக தெரியவந்துள்ளது



 
 
கத்தார் நாட்டை சேர்ந்த 5 பேர் மற்றும் ஓமன் நாட்டை சேர்ந்த 3 பேர் மொத்தம் எட்டு பேர் சுமார் 50 முதல் 80 வயதுகளை உடையவர்கள் ஐதராபாத்தில் உள்ள புரோக்கர்கள் உதவியுடன் 15 முதல் 18 வயதான சிறுமிகளை திருமணம் செய்ய நடந்த முயற்சிகள் போலீசாரின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக முறியடிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் 4 லாட்ஜ் ஓனர்கள், ஐந்து புரோக்கர்கள் மற்றும் ஷேக்குகல் பிடிபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை  நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த கொடூரமான விஷயத்தில் இன்னும் பல புரோக்கர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்றும் அவர்களில் பலர் பெண்கள் என்றும் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அனைத்து புரோக்கர்களையும் ஒட்டுமொத்தமாக பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments