Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ரக்யா தாகூர் ஒரு தீவிரவாதி! – ட்விட்டரில் ட்ரெண்டிங்!

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (13:31 IST)
மக்களவையில் நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என பாஜக ப்ரக்யா தாகூர் பேசியதற்கு
கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

நேற்று நாடாளுமன்றத்தில் காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை பாஜக எம்.பி பிரக்யா தாகூர் ’தேசபக்தர்’ என குறிப்பிட்டு பேசினார். இதற்கு உடனடியாக பாராளுமன்றத்திலேயே கடும் அமளி ஏற்பட்டது. அதனால் பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனை குழுவிலிருந்து பிரக்யாவை நீக்கியது பாஜக.

நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் உறுப்பினர் ராகுல் காந்தி ”தீவிரவாதி பிரக்யா தீவிரவாதி கோட்சேவை “தேசபக்தர்” என்று அழைக்கிறார். இந்திய பாராளுமன்ற வரலாற்றிலேயே இது ஒரு சோகமான நாள்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ப்ரக்யா தாகூரை தீவிரவாதி என குறிப்பிட்டு ட்விட்டரில் Terrorist என்ற ஹேஷ்டேகை பலர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் கோட்சே குறித்த ஹேஷ்டேகுகளும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments