Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (21:52 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 


 
கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை குறைக்க ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு ரஷ்ய நாடும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
 
கடந்த சில மாதங்களாக 50 டாலருக்கும் குறைவாகவே இருந்து வந்த கச்சா எண்ணெய் பேரல் விலை தற்போது 55 டாலரை கடந்துள்ளது. அதன்படி கச்சா எண்ணையை இறக்குமதி செய்யும் நாடுகள் விலையை அதற்கேற்ப நிர்ணயித்து வருகின்றனர்.
 
இந்தியாவில் ஏற்கனவே எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை மாதம் இருமுறை மாற்றி வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல் விலை ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிப்பு.. மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு..!

14 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்: பகுஜன் சமாஜ் பொது செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்

ஒரு சவரன் ரூ.56,000ஐ தொட்டது தங்கம் விலை.. இன்னும் உயரும் என தகவல்..!

ஒரு வாரத்தில் உச்சம் சென்ற பங்குச்சந்தை இன்று சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மின்சாரம் தாக்கி தம்பி பலி.. இறுதி சடங்கில் அக்காவும் ஷாக் அடித்து பலி! - திருவாரூரில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments