Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாட்டுக்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி.. நிலச்சரிவு பாதிப்புகள் ஆய்வு..!

Siva
புதன், 7 ஆகஸ்ட் 2024 (19:53 IST)
கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி வரும் பத்தாம் தேதி வருகை தர இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

வயநாடு பகுதியில் உள்ள மூன்று மலை கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் ஒரு வாரத்திற்கு மேலாக அங்கு மீட்பு படையினர் மீட்பு பணிகளை செய்து வருகின்றனர் என்பது தெரிந்தது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஏற்கனவே மத்திய அரசு ராணுவத்தை அனுப்பி உள்ளது என்பதும் விமானப்படையும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி வரும் பத்தாம் தேதி வயநாட்டிற்கு வருகை தர இருப்பதாகவும் அப்போது அவர் நிலச்சரிவு பாதிப்புகளை ஆய்வு செய்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

குளிர்பானத்தில் மது கலந்துக் கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு: உறவினர் போல நாடகமாடிய கணவன்,மனைவி கைது....

சந்திரயான் - 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை.!!

அடுத்த கட்டுரையில்
Show comments