Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேடப்பட்ட குற்றவாளியை தேடிப்பிடித்து போட்டுத்தள்ளிய போலீஸ்

Advertiesment
பஞ்சாப்
, சனி, 14 ஜூலை 2018 (13:47 IST)
பஞ்சாப்பில் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீஸார் தேடிப்பிடித்து என்கவுண்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சன்னி மாசிஹ் என்பவன் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடையவன். இவன் மீது ஏராளமான வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த நிலையில், அவன் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்து வந்தான். போலீஸாரும் தனிப்படை அமைத்து அவனை தீவிரமாக தேடி வந்தனர்.
 
இந்நிலையில் நேற்று சன்னி தனது கூட்டாளிகளோடு காரில் வந்தவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி காரை திருடிச் சென்றுள்ளான். இதனையறிந்த போலீஸார் அவனை துரத்திச் சென்றனர். அப்போது அந்த ரவுடி கும்பல் காரிலிருந்து போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்.
பஞ்சாப்
இதனால் பதிலுக்கு போலீஸாரும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இரண்டு பேரை கைது செய்த போலீஸார், சன்னியை சுட்டுக் கொன்று பிடித்தனர். இச்சம்பவம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈபிஎஸ்-ஓபிஎஸ் எனக்கு தடையாக உள்ளனர். ஜெ.தீபா