Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரனாப் முகர்ஜி உடல்நிலை மேலும் பின்னடைவு – மருத்துவமனை அறிக்கை!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (11:54 IST)
இந்திய முன்னாள் ஜனாதிபதியான பிரனாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோசமாகியுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான பிரனாப் முகர்ஜி, மூளையில் உள்ள ரத்தக்கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்குக் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. அதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்து வெண்ட்டிலேட்டர் உதவியுடனேயே இருந்தார்.

தற்போது வரை அவர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அவரது சிறுநீரக செயல்பாடுகள் மேலும் குறைந்துள்ளதாகவும் தொடர் கோமா நிலையிலேயே அவர் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்றைய அறிவிப்பில் பிரனாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோசமாகியுள்ளதாகவும், அவர் தொடர்ந்து வெண்ட்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments