Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டார் மோடி: பிரவீன் தொகாடியா

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2018 (19:58 IST)
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக இந்து மதத்திற்கான கட்சி என்ற முத்திரையில் இருந்து வரும் நிலையில் பாஜகவும் மோடியும் இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக முன்னாள் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
இன்று அயோத்தி வருகை தந்த முன்னாள் இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் நாங்கள் பல ஆண்டுகளாக பொறுமையாக உள்ளோம். ஆனால் எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. ராமர் கோவில் கட்டுவதற்கான சட்டத்தை வரும் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் அதை எப்படி சாதிப்பது என்பது எங்களுக்கு தெரியும். ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நாடு முழுவதும் 10 கோடி கையெழுத்துகள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த நான்கு ஆண்டுகளில் பல நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருக்கும் மசூதிகளுக்கு செல்கிறார், ஆனால் அருகே உள்ள அயோத்திக்கு இதுவரை அவர் ஒருநாள் கூட வந்ததில்லை. ராமர் கோவில் விவகாரத்தில் பாஜகவும் பிரதமர் மோடியும் கோடிக்கணக்கான இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர்' என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments