Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை குடியரசு துணை தலைவர் தேர்தல்.. இன்று விருந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!

Advertiesment
Vice President Election

Mahendran

, திங்கள், 8 செப்டம்பர் 2025 (10:27 IST)
நாளை நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தல் காரணமாக, இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  விருந்து அளிக்கிறார்.
 
இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் எதிர்க்கட்சிகளின் 'இந்தி' கூட்டணியின் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர்.
 
எம்.பி.க்களின் பலத்தின் அடிப்படையில், சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பர். முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது.
 
சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால், தமிழகத்திலிருந்து இப்பதவியை வகிக்கும் மூன்றாவது நபர் இவர் ஆவார். ஏற்கனவே சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் இப்பதவியை வகித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளத்தில் சிக்கிய 300 மாருதி சுசுகி கார்கள்.. குடோன் மூழ்கியதால் கோடிக்கணக்கில் நஷ்டம்..!