Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லட்டு மாதிரி செல்போனை விழுங்கிய கைதி மருத்துவமனையில் அனுமதி...

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (19:04 IST)
வட மாநிலமான கொல்கத்தாவில் உள்ள பிரசித்தி பெற்ற சிறைச்சாலையில் ஒரு கைதிக்கு திடீரென்று வயிற்று வலியால் துடிக்கவே சிறைக்காவலர்கள் அவரை  அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் அவருக்கு வயிற்றில் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது மருத்துவர் போலீஸார் உட்பட அனைவருமே திகைத்து விட்டனர்.
 
முதலில் அதிகாரிகள் சிறையில் சோதனை நடத்திய போது மாட்டிக்கொள்வோமோ என்று பயந்த சிறைக்கைதி தன் கையில் வைத்திருந்த செல்போனை லபக் என்று விழுங்கியுள்ளார். அதனால் தான் அவருக்கு வயிற்றில் வலி எடுத்துள்ளது.
 
கைதி ஒரு விரல் அளவுள்ள செல்போனை விழுங்கியுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
 
அந்த செல்போனை குடல் இயக்கம் வழியாக எடுக்க மருத்துவர்கள் முயற்சி எடுத்து வருவதாகவும். அது முடியாமல் போனால்  கைதிக்கு  அறுவைசிகிச்சை செய்து செல்போனை எடுக்கப்போவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments