Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாது - கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (14:40 IST)
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
கொரோனா 2-வது அலையின் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. எனவே 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.
 
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. இதையடுத்து பள்ளிகள் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

இதற்கு பல்வேறு அரசியல் காட்சிகள் எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில் இது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரியில் தற்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments