Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு: ராகுல் காந்தி அதிரடி முடிவு..!

2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு: ராகுல் காந்தி அதிரடி முடிவு..!
, ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (11:11 IST)
காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நாளை ராகுல் காந்தி சூரத் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளனர் 
 
ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி என்ற சொல்லை சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தியதற்காக அவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் தீர்ப்பை சமீபத்தில் சூரத் நீதிமன்றம் வழங்கிய போது ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை அடுத்து அவரது எம்பி பதவி தகுதி நீக்க செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக ராகுல் காந்தி நாளை சூரச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்வார் என்றும் அதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர்கள் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’விடுதலை’ படத்தை பார்க்க வாக்குவாதம் செய்த பெண் மீது வழக்கு..