Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோகோ கோலா சர்ச்சை: ராகுல் காந்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Advertiesment
ராகுல் காந்தி
, திங்கள், 11 ஜூன் 2018 (19:53 IST)
பாஜக பிரமுகர்கள்தான் அவ்வப்போது நெட்டிசன்களின் கையில் சிக்குவார்கள் என்றால் தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் சிக்கியுள்ளார். சமீபத்தில் ராகுல்காந்தி கோகோ கோலா குறித்து கூறிய ஒரு கருத்தை நெட்டிசன்கள் தனி ஹேஷ்டேக் உருவாக்கி கலாய்த்து வருகின்றனர்.
 
இன்று பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மக்களுக்கான மாநாடு ஒன்றில் பேசிய ராகுல்காந்தி, 'கோகோ கோலா நிறுவனத்தை நிறுவியர் யார் என்பது யாருக்காவது தெரியுமா? அவர்தான் முதலில் எலுமிச்சை சாற்றில் சர்க்கரை கலந்து பரிசோதித்தவர். அவரது பரிசோதனை அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் பின்னர் அதில் கிடைத்த பணத்தில் தான் கோலா நிறுவனம் தொடங்கப்பட்டது' என்று கூறினார்.
 
ராகுல் காந்தி
ஆனால் கோகோ கோலா நிறுவனத்தை அமெரிக்க டாக்டர் ஒருவர் தொடங்கினார். உண்மை இவ்வாறிருக்க ராகுல் காந்தியின் கோகோ கோலா பேச்சு நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு தற்போது #AccordingToRahulGandhi என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம்-2 டிரெய்லர் வெளியானது