Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி: தீபாவளிக்கு பின்னர்!

காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி: தீபாவளிக்கு பின்னர்!

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2017 (10:35 IST)
அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ள ராகுல் காந்தி தீபாவளிக்கு பின்னர் அந்த கட்சியின் தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.


 
 
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக உள்ள சோனியா காந்தி அவ்வப்போது உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நீண்ட காலமாக தலைமை பதவிக்கு தன்னை தயார்ப்படுத்தி வரும் ராகுல் காந்தி விரைவில் தலைவர் பொறுப்பை ஏற்பார் என பல நேரங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் ராஜீவ் குடும்பத்துக்கு நெருக்கமானவருமான சச்சின் பைலட் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில், தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ராகுல் காந்தி கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்க இருக்கிறார் என கூறியுள்ளார்.
 
மேலும், துணைத்தலைவராக இருந்து ராகுல் கட்சிக்காக நிறைய செய்திருக்கிறார். ராகுல் காந்தி மூலம் கட்சி மேலும் பலம் பெறும். வாரீசு அரசியல் ஒரு பிரச்சனையே இல்லை. பல கட்சிகளில் வாரிசுகள் அரசியலில் உள்ளனர். அவர்களால் கட்சிக்கு என்ன பலம் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். ராகுல் காந்தியின் தலைமை பொறுப்பேற்பு தீபாவளிக்கும் பின்னர் இருக்கும் என காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments