Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 20 May 2025
webdunia

தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு செல்போன் பரிசு! – குஜராத்தில் அறிவிப்பு!

Advertiesment
National
, ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (08:40 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் குஜராத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு செல்போன் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டு அலைகள் தீவிரமாக பரவிய நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதுவரை இந்தியா முழுவதும் 100 கோடி டோஸ் தடுப்பூசிகளுக்கு மேலாக செலுத்தப்பட்டுள்ளது. எனினும் பல மாநிலங்களில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இரண்டாவது டோஸ் போடுவதை ஊக்குவிக்க இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒமிக்ரான் அச்சுறுத்தல் உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொண்டர்கள்‌ மீது விழும்‌ ஒவ்வொரு அடியும்‌ என்மேல் விழுந்த அடி: சசிகலா அறிக்கை!