Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.200 நோட்டு அறிமுகம் ; ரூ.2000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (14:49 IST)
ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது.


 

 
கடந்த ஆண்டு பழைய நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதன் பின்பு மக்களிடம் இருந்த பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு, அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட்டன.
 
மேலும், அப்போதைய பணத் தட்டுப்பாட்டை தவிர்க்க, அவசர அவசரமாக ரூ.7.4 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. மக்கள் மத்தியில்  தற்போது 15.22 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பணப்புழக்கம்  இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
மேலும், புதிதாக அச்சடிக்கப்பட்டு வரும் 200 ரூபாய் நோட்டுகள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளன. மேலும், 2000 ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக 500 ரூபாய் நோட்டுகளும் அதிக அளவில் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.
 
எனவே, தற்காலிகமாக 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments