Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹிங்கியா மக்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. உபி முதல்வர்

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (07:17 IST)
மியான்மரில் ரோஹிங்கியா மக்கள் அடித்து விரட்டப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் அகதிகளாக நுழைய முயற்சித்து வருகின்றனர்.



 
 
ரோஹிங்கியா மக்களை அனுமதிக்க இந்தியா மறுத்துள்ளதோடு, ஏற்கனவே 'இந்தியாவுக்குள் நுழைந்திருக்கும் ரோஹிங்கியா மக்கள் நாற்பதாயிரம் பேரையும் நாடுகடத்தும் திட்டத்தில் இந்தியா உள்ளதாக சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ''ரோஹிங்கியா மக்களைப் பற்றி தங்களது நிலைப்பாட்டை இந்திய அரசு தெளிவாக அறிவித்துவிட்டது. இந்தியாவுக்கு வரும் ரோஹிங்கியா இன மக்கள் அகதிகளே அல்ல. அவர்கள் அழையாமல் நாட்டுக்குள் நுழைபவர்கள். அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். சிலர் அவர்களுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருவது வருத்தத்திற்குரியது. அவர்களுக்குத் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments