Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மான்வேட்டை வழக்கில் சல்மான்கான் குற்றவாளி - நீதிமன்றம் தீர்ப்பு

Advertiesment
சல்மான்கான்
, வியாழன், 5 ஏப்ரல் 2018 (11:38 IST)
20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சல்மான் கான் மீதான மான்வேட்டை வழக்கில்,  சல்மான் கான் குற்றவாளி என ஜோத்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
சல்மான் கான், சயீப் அலிகான், நடிகை தபு சோனாலி பிந்த்ரே, நீலம், கடந்த 1998 ஆம் ஆண்டில், திரைப்பட ஷீட்டிங்கின் போது, அங்குள்ள வனப்பகுதிக்கு வேட்டையாட சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த இரண்டு மான்களை சுட்டுக் கொன்றதாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
சல்மான்கான்
சல்மான்கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் பிரிவு 51–ன் கீழும், சயீப் அலிகான், நடிகை தபு சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் மீது சட்டப் பிரிவு 149–ன் கீழும் குற்றம் சாட்டப்பட்டது. 20 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று ஜோத்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின.
சல்மான்கான்
அதன்படி மான்வேட்டை வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த வழக்கிலிருந்து சயீப் அலிகான், நடிகை தபு சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சல்மான் கானுக்கான தண்டனை விவரம் விரைவில் தெரிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய போலீஸார்