நேற்று காஷ்மீரை அதிரவைத்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளின் ஸ்கெட்ச்கள் டைம்ஸ் நவ்-க்கு எக்ஸ்க்ளூசிவாக கிடைத்துள்ளன. அசீப் பௌஜி, சுலேமான் ஷா மற்றும் அபூ தல்ஹா ஆகியோர் என பயங்கரவாதிகளின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ளவர்கள் பாதுகாப்புப் படையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். லஷ்கர்-ஏ-தொய்பா குழுவின் முக்கியத் தலைவர் சஃபுல்லா சாஜித் ஜுட் இந்த தாக்குதலுக்கு மூளையானவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 45 வயதான இவர் இஸ்லாமாபாதில் இருந்து இயக்குகிறார். மற்றொரு முக்கிய நபராக ஜெய்ஷ்-ஏ-முகம்மதின் ஆசிப் ஷேக் தந்ஸீம் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இந்த தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட ஒருவர் என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் மதியம் 2:30 மணியளவில் பஹல்காம் அருகே உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நடந்தது. அடையாள அட்டைகள் கேட்டவுடன் பயங்கரவாதிகள் சுட்டுத் தாக்கினர். இதில் 28 பேர் பலியாகினர், இதில் நேபாளம் மற்றும் UAE-யைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் உள்ளனர்.
இந்திய இராணுவம் இந்த தாக்குதலை “கோழைத்தனமான வன்முறைச் செயல்” எனக் கண்டித்துள்ளது.