Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

Advertiesment
monsoon

Siva

, ஞாயிறு, 11 மே 2025 (10:55 IST)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி குறித்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்தியாவை பொருத்தவரை, வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை என இரண்டு பருவ மழைகள் மாறி மாறி பொழிந்து வருகின்றன.
 
இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 27ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு வழக்கத்தை விட நான்கு நாட்களுக்கு முன்னதாகவே தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில், தமிழகத்தில் வெப்பம் இன்னும் சில நாட்களுக்கு அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
நேற்று தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, திருத்தணி, திருச்சி, தர்மபுரி ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.
 
இன்று முதல் 13ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, அதாவது இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு ஆர்டர் போடுறாங்க! இந்திரா காந்தி இருந்திருந்தா..? - காங்கிரஸ் கொந்தளிப்பு!