Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர் கைது! போலீசார் அதிரடி

Webdunia
சனி, 3 ஜூன் 2017 (06:36 IST)
ஒரு மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவரை அனைவரும் பாராட்டி வாழ்த்துவதைத்தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் முதன்முறையாக மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்த மாணவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது நடந்தது பீகார் மாநிலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.



 




சமீபத்தில் பீகார் மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 86.2% மதிப்பெண் எடுத்து கணேஷ்குமார் என்ற மாணவர் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். ஆனால் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் பேட்டியளித்தபோது பாடம் சம்பந்தப்பட்ட கேள்விக்கு பதில் கூற திணறினார்.

இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த தேர்வுத்துறையினர் அவருடைய மதிப்பெண்களையும் விடைத்தாள்களையும் சரிபார்த்தபோது அவர் முறைகேடு செய்து தேர்வு எழுதியது தெரிய வந்தது. இதனால் கணேஷ்குமார் தேர்ச்சி ரத்து செய்ததோடு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் பீகார் மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments