Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை - பிரதமர் மோடி

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (16:02 IST)
சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.  இதுவரை இந்த நோயால் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.  இந்தியாவில் ஊரங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் மக்களிடன் பணப்புழக்கம் குறைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரமும் பெருமளவு சரிவடைந்துள்ளது. இருந்தபோதிலும், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிவாரண உதவி செய்துவருகிறது.

இந்நிலையில் மாநில அரசுகள் எப்போது ஊரடங்கை தளர்த்தும் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது :

மாநில அரசுகளின் நிர்வாகிகள் மற்றும் வல்லுநர்களிடம் மோடி காணொலியில் ஆலோசனை நடத்தினார். அதில், மாநில அரசுகள்  ஊரடங்கை நீடிக்க கோரிக்கை விடுத்துள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமையாக உள்ளது. இக்கட்டான நேரத்தில் சில கடினமான முடிவு எடுக்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments