Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகள் இணைப்பு பிரச்சனைகளை உண்டாக்கும் – சுப்ரமண்ய சுவாமி எதிர்ப்பு !

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (11:56 IST)
வங்கிகள் இணைப்புக்கு பாஜகவின் மூத்த தலைவரான சுப்ரமண்ய சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை சரிசெய்யும் நோக்கோடு பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைத்துள்ளது மத்திய அரசு. இந்த முடிவுக்கு வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் வல்லுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வங்கிகள் இணைப்பு குறித்து பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமண்ய சுவாமி இன்று கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘பொருளாதாரம் சரியாக இல்லாத நிலையில், வங்கிகள் இணைப்பை அவசரப்பட்டு நடைமுறைப்படுத்தி உள்ளார்கள். இது எளிதான காரியம் அல்ல. ஒரே சாலையில் பேங்க் ஆஃப் பரோடாவும் இருக்கும். விஜயா வங்கியும் இருக்கும். நாடு இப்போது இருக்கும் பொருளாதார நிலைமையில் இதை செய்திருக்கக் கூடாது. அருண் ஜேட்லி நிதி அமைச்சராக இருந்தபோது சிறப்பாகச் செயல்படாததன் விளைவை நாம் இப்போது அனுபவிக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments