Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிண்டன்பர்க் அறிக்கைகளை எந்த நாடும் மதிப்பதே இல்லை.. உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்

Siva
புதன், 14 ஆகஸ்ட் 2024 (07:40 IST)
ஹிண்டன்பர்க் அறிக்கைகளை உலகின் எந்த நாடும் மதிப்பதில்லை என்றும், ஆனால், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் ஹிண்டன்பர்க் அறிக்கையை தீவிரமாக எடுத்து கொண்டு விவாதிப்பது வெட்கக்கேடானது என்றும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தெரிவித்துள்ளார்.

அதானி குழுமம் சார்ந்த நிறுவனங்களில்  செபி தலைவர் மாதபி புரி புச் பங்குகளை வைத்துள்ளார் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே இதுகுறித்து கூறிய போது, ‘ஹிண்டன்பர்க் அறிக்கைகளை உலகில் உள்ள எந்த நாடும்  மதிப்பதே இல்லை. இந்தியாவில் மட்டுமே இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது. இந்தியாவை ஹிண்டன்பர்க்  துச்சமாக பார்க்கிறது, இதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற நிறுவனங்களின் அறிக்கைகளை அனுமதித்தால்,   நம் நீதி அமைப்பையே கேள்விக்கு உட்படுத்தப்படும் நிலை ஏற்படும்’ என்று கூறியுள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments