Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும்.! உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு..!!

Senthil Velan
திங்கள், 11 மார்ச் 2024 (13:04 IST)
காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை புதிய சட்டங்களை கொண்டு நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகித்து வருகிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் அண்மையில் ராஜினாமா செய்தார்.  தற்போது இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவிகள் காலியாகவுள்ளது.
 
காலியாக உள்ள தேர்தல் ஆணையர் பதவியிடங்களுக்கு புதிய ஆணையர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி, மூத்த மத்திய அமைச்சர், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய மூவர் குழு வரும் 15-ம் தேதி டெல்லியில் கூடி புதிய தேர்தல் ஆணையர்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ: மக்களவை தேர்தல் பணிகள் மும்முரம்..! தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை..!!
 
இந்நிலையில் காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை புதிய சட்டங்களை கொண்டு நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில்  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாகூர் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.   புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும் என தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments