Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னை கடித்த பாம்பை பையில் எடுத்த வந்த இளைஞரால் பரபரப்பு

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (13:23 IST)
நாகை அரசு மருத்துவமனைக்கு  தன்னை கடித்த பாம்பை பையில் எடுத்த வந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் திருமருகல் அருகேயுள்ள கல்லுழி திருவாசல் சிவன் கோவில் தெருவில் வசிப்பவர் மகேந்திரன்( 21வயது). இவர் நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மன் வீதி உலா நடந்தது.

மகேந்திரன் தன் வீட்டு வாசலில் அமர்ந்து அம்மன் வீதி உலாவை பார்த்து கொண்டிருந்தார். அப்போது, அவர் அருகே வந்த ஒரு சாரை பாம்பு அவரை கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகேந்திரன் அருகில் இருந்தவர்கள்  உதவியுடன் அந்த பாம்பை அடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த பாம்பை ஒரு பையில் போட்டு கொண்டு நாகை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார். அவர் பாம்புடன் இருந்ததைப் பார்த்து, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments