Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரபரப்பான சூழ்நிலையில் தம்பிதுரையின் திடீர் டெல்லி பயணம் ஏன்?

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (00:39 IST)
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இணைப்பு குறித்து எப்போது வேண்டுமானாலும் அதிகாரபூர்வ செய்திகள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.


 


இந்த நிலையில் சற்று முன்னர் அதிமுகவின் முக்கிய பிரமுகரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை திடீரென நள்ளிரவில் டெல்லி கிளம்பி சென்றார்.

தம்பித்துரை எதற்காக டெல்லி செல்கிறார், அங்கு யாருடன் ஆலோசனை நடத்தவுள்ளார் என்பது குறித்த தகவல் இதுவரை கட்சியின் வட்டாரத்தில் இருந்து வெளிவரவில்லை. இருப்பினும் நாளை அவர் தேர்தல் கமிஷனில் இரு அணிகளும் இணைவது குறித்து தகவல் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

டெல்லி செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த தம்பித்துரை கூறியதாவது: அதிமுகவில் பிளவு இல்லை. மாற்றுக் கருத்துகள் மட்டுமே உள்ளன. கூடிய விரைவில் அந்த கருத்து மாறுபாடு மறையும்.’ என்று கூறினார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments