Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் பலி

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (11:45 IST)
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த 14 வருடமாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவின் குரேஸ் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் பனிப்பாறைகள் சரிந்து சோதனை சாவடி முழுதும் மூடப்பட்டது. அதில் பாதுகாப்பு பணியில் இருந்த  தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விமானம் மூலம் அவரது உடல் தமிழகத்தை வந்தடைகிறது. பின் அவரது சொந்த ஊரில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments