Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
, வெள்ளி, 31 டிசம்பர் 2021 (10:00 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களில் வேகமாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. சமீபகாலமாக 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 16,764 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,48,38,804 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 220 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,81,080 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,42,66,363 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 91,361 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையை சூழ்ந்த மழை நீர்... 32 மின்மாற்றிகளில் விநியோகம் நிறுத்தம்!