Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கைகள் சேலை அணிய கூடாது: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!

திருநங்கைகள் சேலை அணிய கூடாது: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (17:51 IST)
திருநங்கைகள் சேலை அணியக் கூடாது எனவும் அவர்கள் ஆண்களை போல பேண்ட் சட்டை அணிய வேண்டும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மஹாராஷ்டிரா மாநிலத்தில் செயல்படும் இந்திய குடியரசு கட்சியின் தலைவராக இருக்கும் ராம்தாஸ் அத்வாலே ராஜ்யசபா உறுப்பினராகவும் மத்திய இணையமைச்சராகவும் உள்ளார்.
 
இவர் நேற்று ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருநங்கைகள் ஆண்களோ, பெண்களோ இல்லை. அவர்கள் மனிதர்கள். அவர்கள் பெண்ணாக இல்லாத போது ஏன் சேலை அணிய வேண்டும். அதற்கு பதிலாக பேண்ட் சட்டை அணிய வேண்டும் என கூறினார்.
 
திருநங்கைகள் ஆண்களுக்கான உடையை தான் அணிய வேண்டும். அவர்கள் சேலை அணியக்கூடாது என்பது எனது கருத்து என அத்வாலே திருநங்கைகளுடனான ஆலோசனை கூட்டத்திலும் கூறியதாக தெரிவித்துள்ளார்.
 
இவர் கூறிய இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடை அணிவது அவரவர் விருப்பம் என திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments