Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடனே ஊரடங்கை அறிவியுங்கள்: உபி அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (09:23 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும், பலியானவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு வருவதால் உடனடியாக 14 நாட்கள் முழு ஊரடங்கை அறிவியுங்கள் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்துக்கொண்டு வரும் வேளையில் இன்னொரு பக்கம் ஆக்சிஜன் பற்றாக் குறையும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஆனால் உத்தரபிரதேச அரசு நோயாளிகளின் எண்ணிக்கை உயிர் பலி எண்ணிக்கை ஆகியவற்றை குறைத்து காட்டுவதாகவும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று கூறி வருவதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன 
 
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஐந்து நகரங்களில் 14 நாட்கள் முழு ஊரடங்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இந்த வழக்கின் விசாரணையின்போது மாநிலம் முழுவதும் டாக்டர்கள் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்
 
மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அனைத்தும் காகித அளவிலேயே இருப்பதாகவும் உடனடியாக செயல் அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments