Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறுதல் சொல்ல போன ராகுல்: அனுமதி மறுத்த போலீஸ்!

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (15:59 IST)
உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்ல சென்ற ராகுல் காந்தியை போலீஸார் அனுமதிக்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கிலும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் உத்தர பிரதேசத்திலும் நடைபெற்றது. அப்போது கலவரம் ஏற்பட்டு வன்முறை சம்பவங்களும், உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. அங்கு நடந்த வன்முறையில் 15 பேர் பலியானார்கள்.

இந்நிலையில் போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற மீரட் நகருக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் சென்றுள்ளனர். ஆனால் நகருக்கு வெளிப்பகுதியிலேயே அவர்களை மறித்த போலீஸார் அவர்கள் உள்ளே நுழைய கூடாது என அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments