Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி கிடைப்பது எப்போது?

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (09:42 IST)
18 வயதுக்குட்பட்டோருக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல். 

 
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுக்குள் வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்பதே மத்திய மாநில அரசுகளை நோக்கமாக உள்ளது. 
 
மார்ச் 1 முதல் 55 வயதுக்கு மேலானவர்களுக்கும், ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேலானவர்களுக்கும், 18 வயதிற்கு மேலானவர்களுக்கு மே மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் 18 வயதுக்குட்பட்டோருக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக தேசிய வைராலஜி மையத்தின் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சமாக நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்தகட்டமாக, 18 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசிக்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. 
 
இந்த ஆய்வுகளின் முடிவுகள் இம்மாதத்திலேயே வந்து சேரும். இதனைத்தொடர்ந்து இவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments