Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டில் 12 பேர் பரிதாப பலி: வைஷ்ணவ கோவில் நெரிசலில் சிக்கியதாக தகவல்

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (07:59 IST)
புத்தாண்டில் 12 பேர் பரிதாப பலி: வைஷ்ணவ கோவில் நெரிசலில் சிக்கியதாக தகவல்
உலகம் முழுவதும் புத்தாண்டு தினம் மிகச் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்றைய புத்தாண்டு தினத்தில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தியாவிலேயே புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புத்தாண்டு சிறப்பு தரிசனம் செய்ய வந்திருந்தனர். 
 
இந்த நிலையில் திடீரென பக்தர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து அதில் இடிபாடுகளில் சிக்கி 12 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயம் ஆனதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

குளிர்பானத்தில் மது கலந்துக் கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு: உறவினர் போல நாடகமாடிய கணவன்,மனைவி கைது....

சந்திரயான் - 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை.!!

அடுத்த கட்டுரையில்
Show comments