Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸா, பாஜகவா யாருக்கு வெற்றி? பாபா ராம்தேவ் ஓபன் டாக்!!

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (10:57 IST)
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க இயலாது என பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக கடும் தோல்வியை சந்தித்துள்ளது. இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க இத்தேர்தலில் வெற்றி பெற இரு கட்சிகளும் முழு முனைப்புடன் இருக்கிறது.
 
இதற்கிடையே கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவிற்காக நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்த பாபா ராம்தேவ், அடுத்த தேர்தலில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்ய மாட்டேன் என சமீபத்தில் கூறினார். அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யப்போவது இல்லை என்றும் அரசியலில் இருந்து விலகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
 
இந்நிலையில் இன்று மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், வரும் தேர்தலில் யார் ஜெயிக்கப்போகிறார்கள் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அதனை கணிக்க முடியாது எனவும் தாம் யாருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ பிரச்சாரம் செய்யவோ அல்லது கருத்து சொல்லவோ விரும்ப இல்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments