Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.787 கோடி சுற்றுச்சூழல் வரித்தொகையை செலவு செய்யாமல் என்ன செய்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்?

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2017 (06:45 IST)
தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ள நிலையில் சுற்றுச்சூழல் செஸ் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட 787 கோடி நிதியைக் கூட செலவழிக்காமல் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு கையிருப்பு வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 


டெல்லி மக்களிடன் சுற்றுச்சூழல் வரி என்ற பெயரில் கடந்த 2015-ம் ஆண்டு 50 கோடியும், 2016-ம் ஆண்டு 387 கோடி ரூபாயும், 2017ஆம் ஆண்டு ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை ரூ.787 கோடியும் வசூலிக்கப்பட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆனால் 2016-ம் ஆண்டு  வெறும் ரு.93 லட்சம் மட்டுமே செலவழிக்கப்பட்டதாக டெல்லி அரசு கூறியுள்ள நிலையில் இந்த ஆண்டு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை அளிக்கவே இல்லை. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி இந்த பணத்தை சுற்றுச்சூழல் நலனுக்காக செலவு செய்யாமல் கையிருப்பு வைத்திருப்பதாக திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மாசு குறைபாட்டால் டெல்லியே ஆபத்தில் உள்ள நிலையில் இதற்காக வசூலிக்கப்பட்ட தொகையை ஏன் செலவு செய்யவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments