Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிசேரியன் செய்யும் போது சிசரை மறந்து வயிற்றில் வைத்த டாக்டர்: பெண் பரிதாப பலி

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (17:19 IST)
அலகாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு சிசேரியன் செய்த டாக்டர் ஒருவர் மறதியின் காரணமாக சிசரை வயிற்றுக்குள் வைத்துவிட்டதால் அந்த பெண் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அலகாபாத் அருகில் உள்ள ஜமாஹா என்ற கிராமத்தை சேர்ந்த அசோக் சோனி என்பவரின் மனைவி பிரியா சோனி கடந்த அக்டோபர் மாதம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அக்டோபர் 29ஆம் தேதி சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. பின்னர் சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

டிஸ்சார்ஜ் ஆன பின்னரும் பிரியாவுக்கு தொடரந்து வயிற்றுவலி இருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகமான வயிற்றுவலியால் அவர் துடிதுடித்தார். உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தான் அவரது வயிற்றில் சிசர் இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் சில நிமிடங்களில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments