Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

delhi protest players
, செவ்வாய், 30 மே 2023 (15:44 IST)
நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசுவதாக மல்யுத்த வீரர்கள் இன்று அறிவித்துள்ளனர்.
 

இந்திய  மல்யுத்த சம்மேளனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் பிரிஜ்பூஷண் சரண்சிங். இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முதல்  டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த  நிலையில் நேற்று முன்தினம்  மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் போலீஸாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.  இதில், பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போட்டியிருந்த கொட்டகைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து டெல்லி போலீஸார் நேற்று கூறியதாவது: ‘’38 நாட்கள் போராட்டத்தை பல வடிவங்களில் நடத்திய அவர்கள் 28 ஆம் தேதி சட்டத்தை மீறிவிட்டனர். இனிமேல் நகரில் எப்பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி வாங்கினாலும் ஜந்தர் மந்தரில் அனுமதி கிடைக்காது’’ என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில்,  தேசத்திற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர் அதன்படி, ஹரித்வாருக்கு பேரணியாக சென்று மாலை  மணிக்கு நதியில் பதக்கங்களை வீசுவோம் என்று  சாக்சி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப் போவதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் இறுதிப் போட்டி: ஜியோ சினிமா செயலி உலக சாதனை