Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களைகட்டிய யோகா திருவிழா..! 600 மாணவர்கள் பங்கேற்று அசத்தல்...!!

Senthil Velan
வெள்ளி, 5 ஜனவரி 2024 (11:22 IST)
புதுச்சேரியில் 4 நாட்கள் நடைபெறும் 29வது அகில உலக யோகா திருவிழாவை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தனர் 
 
யோகக்கலை உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். அந்த வகையில் புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அகில உலக யோகாத்திருவிழாவை நடத்துவது வழக்கம். 
ALSO READ: காவிரி தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை.! ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வேண்டும்..!!

இந்தாண்டு 29 வது அகில உலக யோகா திருவிழா  வரும் 7ந்தேதி வரை நடைபெறுகிறது.  புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லெட்சுநாராயணன், தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு யோகா திருவிழாவை தொடக்கி வைத்தனர்.
துவக்க நாளில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பெருந்திறள் யோகாசனஙகளை செய்து காட்டி அசத்தினர்.

காமராஜர் மணிமண்டபத்தில் பல்வேறு மாநில யோகா கலைஞர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் யோகாசன போட்டிகள் நடைபெறவுள்ளது. மேலும் இந்த யோகா திருவிழாவின் ஒரு பகுதியாக தியானப்பயிற்சி, யோகப்பயிற்சி, யோகா தொடர்பான கருத்தரங்கம், யோகா மற்றும் இயற்கை சிகிச்சை முறைகள் உள்ளிட்டவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments